
எலும்பு சத்தம்............
...நரம்பு மண்டலம் தோல் தாண்டி துடித்தது ..
...பரபரப்பை தூவின செய்திகள் .. குளிர்காலம் தில்லியில் ...
...சீமான்களும் சீமாட்டியரும்..மிடுக்கு ஆடையில் ...
....கால் வலிக்க கடை கடையாய்..ஏறி ..
...தோல் வலிக்க பை மாட்டி..பொருக்கி கொண்டனர் .
...அப்பாடா 2011 ...கூல் டு ஹாட் ..... .யார் செத்தா நமக்கென்ன ?
ரீபோக் தொடங்கி ...அல்லேன் சல்லி வரை ..அடைக்கலம் அக்குளில் ..
...காசப்லான்கா ...7000 ..நிகி 3000 ..என...
...தானியங்கி பண (ATM) கார்டுகளை ...சொருகி எடுத்தால் முடிந்தது ..சந்தை .
......ரேஷன் கார்டு ..கூட இல்லாத மனிதர் ..சுமையாய் இந்தியர் பட்டியலில் ...
..ஒவொரு ..சிகப்பு விளக்கு சிக்னலிலும் ... உடல் மூடாது ..
...இன்னும் கருப்பு மனிதர்கள் கை நீட்டி ...பிச்சை ...
..........ஒன்பது மாத நிறை கர்ப்பிணி கூட ..உடல் காட்டும் அவலம் ..
.................தில்லி சாலையில் தினம் அரங்கேறும் ....
சுரேஷ் கல்மாடிக்கும் ஷீலா தீக்ஷிதிக்கும் ...தெரியாத ரகசியம் ..
....அது தில்லி ரோட்டில்....வெள்ளைபார்வையில் படாது போன ..கருப்பு மனிதர்கள் ....
காமன் வெல்த் ..வீரர்க்கு ..தனி சாலை போட்ட..அரசாங்கம் ...
....இந்த மனிதர்களை ...வேலி போட்டு மறைத்தது.....
..பூர்வீக குடிகள் மறைப்பதே குல தொழிலாய்..கொண்ட ...இவர்
.....நீதி தேவதையின் ரிப்பனை திருடி ...திறந்த விழி குருடராய் ..திகைப்பார்......
...ஓங்கி அடித்தார் போலீஸ்காரர் ...ஒரு பிஞ்சு பிள்ளையை ...
.................பச்சை விளக்கு போட்டபின்னும் ...கார் கண்ணாடி தடவி ...
..கருணை இல்லா மனிதர் முன் குரங்காட்டம் போட்டதற்கு ...
....கன்னத்தில் சிகப்பாய் வலி ...சிக்னல் மட்டும் பச்சை .....
...................ஒய் ரிக்சா ...கித்னா லேதே ...ஆர்ட் பாகில்ட்டி ...ஜானா .. டிகே ...
...ஆஞ்சி செல்லேங்கே ...பீஸ் ருப்யா...மேடம் ...
....அரே பாகல்...செல் ..........தஸ் லேலோ .....
என பேரம் பேசி நான்கு பேர் அமர ....
...எஞ்சிய ...உயிரோடு ..ஏறி மிதித்தான் ...பீகார் மாநில ..ரிக்ஷாக்காரன் ...
...உடலின் சத்தமும் ..பெடலின் சத்தமும் ஒன்றாய் கேட்டது ....
கிழிந்த லுங்கியில் ..தொங்கியது அவன் மூலதனம் ...முப்பது ருபாய் ...
...ஒரு மேடு வந்தது .. போர்களத்தில் ..எதிரியை ...
...கண்டது போல் மூச்சு முறைதாண்டி சிதறியது ...
................வண்ண வண்ண கார்களும் ...காதலில் திளைக்கும் இளசுகளின் ...
....இருசக்கர வாகன ..சத்தமும் இவன் உயிரை ..இன்னும் உரிந்தது ....
யாரை அழைப்பான் ..இந்த இளைஞன் ....
...முலைப்பால் ஊட்டி வளர்த்த தாயையா..
..அல்ல முனகி சாக கிடக்கும் ...தகப்பனையா...
.........மூன்றாம் வகுப்பு படிக்கும் தமபியையா..... ..அல்ல சீதனம் பத்தாமல் ...வீட்டில் கிடக்கும் பாசக்கார தங்கையைய...
.
...............யாரை அழைப்பான் ..
.....இந்த ஊர் தின்னும் கூட்டத்தை...
....தன் ஒத்த நாடியில்..தூக்கிபோகும்... பூர்வீக குடி ....
...........ஒரு பெருத்த சினம் அவனின் கண்ணில் ..
அவன் முகத்தில் ...அவன் மூச்சில் இருப்பதாய் உணர்ந்தேன் ......
..........தேர்வு முடிந்து ...திரும்பிடினும் .....
...சட்ட புத்தகத்தை ...நழுவவிட்டது போல் ..ஒரு ...மாயம் ........
..........அந்த காட்சி கண்ணை குத்தியதால் ...........
..நானும் ஏறித்தான் போகவேண்டும் .....
....இருபது ருபாய் தந்து ...................
விஸ்வ வித்யாலய ...மெட்ரோ ரயில் நிறுத்தம் ...
....காவலர் லத்திகள் ..ரிக்ஷகரர்களின் முதுகில்தான் ....
..............மேலும் ....காத்து பிடுங்கி விளையாடும் ...
காட்சி பொருளாய் இவர்கள் ரிக்சா வண்டி ...................
...............ரயில் தடம் புகும் வரையில் ...
..அந்த எலும்பு சத்தம் என செவியில் இருந்தது ...........
.....நினைக்க நினைக்க ....
....என இடது மார்பில் எதோ ஒரு சத்தம் ...
.........................ரத்த பாசத்தில் ...அவனுக்காக...என் எலும்பு ....
.............பிழன்று திட்டியது .....
பாசக்காரன் வீரமணி .
No comments:
Post a Comment