
சுட்டு போட்ட சுனாமி ..................
..மீந்த மீனை காய்ந்த மணலில் ...போடு ..என
..தங்கையா ...சொன்னான் ...வள்ளியிடம்
...தா ...பள்ளிகொடம் போவல ...போ ...போ ..
...என அதட்டினார் . செங்கேனியை ...லாரன்சு வாத்தியார் ....
...ஏன்டா ...பட்டுச்சா ..இன்னிக்கி ...இல்ல... தெக்க..போடா நாளைக்கு ..
...கத்தினான் கடலில் நின்றே ..கொக்கி ...ஜோசப் கிட்ட ....
ஏன்டி இன்னைக்கு தேதி இன்னா ... 26 டி ...
....இங்கிலீஷ் மாசமா ..தமிழ் மாசமா ...
....தெ தெரியல ..தொ ..பாதர் ..கிட்ட கேளு ...என்றாள்...மீனாம்பாள்....
...கெடா வெட்டனும் ...இன்னு முனியாண்டி ..புலம்ப ...
...மாதா கோயில் போவனும் என ..அந்தோணியம்மா ...சொல்ல ...
..............உப்பு செட்டியார் ..காய் வண்டி .. காய் கறி ..காய் கறி ....வாங்கம்மா ....
...குப்பத்தில் நுழைய ........ஊரே கூடி ...ஒன்னா நிக்க ....
..ஓடி வந்தான் ...ஸ்டீபன் ....பிரபு ...இன்னும் இரண்டு பயல்கள் ...
...தெ எம்மா ..தெ எம்மா ...சீக்கிரம் வா கடல்பக்கம் ....
...சீண்டி சீண்டி இழுத்தான் ...முப்பது ருபாய் மீன் வித்த காசை ..
.............முடிந்திருந்த ...பாக்கியம் அம்மாவின் முந்தானையை ..........
... முதல் அலை வாரிவந்த...கடல் மீன்... அடடா அடடா ...
துள்ளி துள்ளி குதித்தன ..மீன் கூட்டம் ..
..அதை அள்ளி செல்ல குதித்தன மனித கூட்டம் ...
( சுமத்ரா அனுப்பிய எழவு செய்தி அறியாமல் )
....கனகம்மா .. போன் செய்தால் ..முருகனுக்கு ..
...மாமா ..சீக்கிரம் திரும்பி வா ...
...கரைல மீன் தட்டுது ....கடல் விட்டு வா என ...
....அவன் படகை திருப்புமுன்னே....
...அம்பது கிலோவுக்கு மேல் மீன் பட்டது இவள் கூடையில் ....
...
அவன் நாகை எல்லை தாண்டி காரை பகுதியில் ...நுழைய ...
...கத்தினார்கள் பூம்புகார் மீனவர்கள் ...
...டேய் ...ஏன்டா ..என ...
இவன் மட்டும் திரும்பினான் ...கரைக்கு ..( எழவு பார்க்க) ......
மாதாவின் கோவில் போகும் ..மழலையர் ..
...வலை பிரிக்கும் நெய்தல் வீரர்கள் ...........
காலையிலேய..பிரசங்கம் துடங்கிய ..பாதிரியார் ...
....கிறிஸ்துமஸ் வாழ்த்துசொல்ல ...மினி பஸ் ஏறி அக்காவீடு போகிற ஷீலா ...
..ஒத்த பறையோடு..தம்புரா போட்ட முனிசாமி ...
...........நாளைக்கு எல்லோரும் பஞ்சாயத்துக்கு வரணும் ...தலைவர் உத்தரவு ........
...தமிழக அரசு பேருந்து கண்டக்டர் ...டீ குடித்து ..முடிக்க ....
..நாகூர் தர்காவில் கூட ...பாடல் ஓசை துவங்க ....
.............வேதாரண்யம் வழியாக வேளாங்கண்ணி போகும் புஷ்பவனம் ..சேரி மக்கள் ....
எட்டு மணியாகியும் எரியும் ...சீரியல் பல்புகள் ....
................என இயல்பாய் துடங்கிய 26 டிசம்பரை ...எழவு நாளாக்கிய பாவி யார் ...
...கடலாடி திரும்பிய ..படகுகள் ...சிலிர்த்து நின்றன ..சற்று உள்ளே ...
மிதந்து வந்தன கரையிலிருந்து பிணங்கள் ....
..படகுகள் ..பல்துலக்கிகொண்டன தம் உடலுரசிய ..சிகப்பு சதை குச்சிகளால்....
...கை பேசிகள் ..மெய் பிரிந்து மாண்ட மனிதர் கரம் பிரிந்து போனது .. ...
.........இனி தொடர்பே கொள்ள முடியாத எல்லையில் ஒதுங்கின பல்லாயிரம் உடல்கள் ....
உறவுகள் உணர்வுகள் உரிமைகள் உண்மைகள் ...
...ஒன்றாய் மாண்டிட ஓடி வந்த இந்த அலைக்கு பெயரென்ன சொல்ல ....
..பட்டனம்சேரி மக்களெல்லாம் ....தர்காவுக்கு ஓட ...
...பாசக்கார குழந்தை விட்டு தாயவள் வாட.....
..முடி மாட்டி செத்த இளம்பெண்கள்.....பாவம் ....காதலன்கள் இன்னும் ஆழ்கடலில் ...
வெட்டாறு அள்ளிவந்த வேற ஊரு பினமெல்லாம் ..
..நாகை கடலில் கரைந்தன ...
..வீணாகிபோனது ரேஷன் அட்டை ....பட்டியலின்றி,,,,,,,,,,,,,,
..கருப்பு மண்ணை எடுத்து அப்பிகொண்டன ..மீந்த மனிதரின் இதயம் ...
..கசப்பு சுவையை ..இனி என்றும் துப்பும் காரம் பார்த்த நாக்குகள்...
....
இத்தனை பேரா உயிர்த்தெழுவது யேசுராசா எழுந்த நாளில் ...
....மீனவ தொழுவத்தில் மீண்டும் பிறக்குமா செம்படவ சிங்கங்கள் ...
...சிகப்பு தாவணி வாங்காமல் செத்த காதலிகளுக்கு ..
...புத்தாண்டு பரிசு என்ன தருவார்கள் ..கருமாதி பந்தலில் ..காதலன்கள் ...
கடலூர் ..கன்னியாகுமரி... நாகை ....பாண்டி ...
...மரக்காணம் ...பூம்புகார் ..வேளாங்கண்ணி ..கல்பாக்கம் ..
...மேல் மணக்குடி சைமன் கோலோனி ..பட்டனம்சேரி ...வெட்டாறு ..
..காரை ..வேதாரண்யம் ..இன்னும் ஆயிரம் இடம் பெயர் ...தெரியவில்லை ...
...என மாநிலம் முழுதும் மாவட்டம் பிரித்து ...
...வட்டமிட்டு ..வலை போட்டு சுட்டு போட்ட சுனாமியே ?????
.....எமை வெட்டிபோட்ட சுனாமியே ???
குண்டுகள் இல்லாது துளை போட்ட உன் துப்பாக்கியை யார் செய்தது ...?
...அம்புகள் இல்லாது குத்திய உன் வில் யார் வளைத்தனுபபியது ?
...அமிலம் இல்லாது எலும்பு குடித்த உன் திரவம் செய்த வேதிகூடம் எது ?
..அரை நொடி கூட .. அனுமதி தராது ....எமை நீர் கயற்றில் தூக்கு போட..
..தீர்ப்புதந்த ...உன் நீதிமன்றம் எது?
அதோ ...நெய்தல்தினை பயத்தில் கிடக்கும் ...26 டிசம்பர் ...
....இரண்டாயிரத்தில் உலகம் அழியுமென்றர்கள்...
..ஆனால் இரண்டு மூன்று லட்சம் பேர் மட்டுமே அழிந்தார்கள் ....
...சார்ந்த உறவுகள் இன்னும் நினைவில் ....அழுதுகொண்டே ........
....நரம்பு முருக்க ..இரும்பு இழுத்து ...
...விசைப்படகை ..வசபடுத்தி...மீன் சொரியும் ...
...வீர வம்சத்தை ..கஞ்சி வரிசையில் கட்டிய சுனாமியே ...உனக்கு ...என்ன திமிர் ?
....கங்கம்மா கும்பிட்டு ..கடல் தாய் மடி உறங்கி ...
..தென்னை தென்றலில் நெய்தல் தாலாட்டில் ...
...மீன் வாசனை பூ புடவையில் ..கண்ணுரங்கிய...
....பிஞ்சுக்களை முழுங்கிய ..நஞ்சு சுனாமியே ?
.................சீ...நீயெல்லா
ம் ஒரு அலை ?
...கரையை கல்லரயாக்கிய...சுமத்ரா அனுப்பியே எழவே ....
....தூங்கு மூஞ்சி அதிகாரிகள் விழித்த பின் வந்திருந்தால்..
...மீந்த உயரின் எண்ணிக்கை ..மேலாகியிருக்கும் ....
.....பிணத்தின் மேல் பணம் என்னும் கொள்ளை பார்...
...அரசின் ஆயுதம் சிரிக்கும் காந்தி முகத்தில் சிக்கி கொண்டது ....
..நாசிக் பேப்பர் நாத்தம்...பிணை நாத்தத்தை...சந்தன மனமாக்கிற்று...
...இறந்தவர் பெயரில் வாழும் இந்திய நிர்வாகம் ....
....சிந்திய சலுகையில் ..சீர் கேட்டு நிற்கும் பூர்வீகம் ....
.....நெய்தல் தினையே ...புரிதல் வேண்டும் புரட்சி படைக்க ...
....காவல் துறைக்கு மீன் வறுவல் வேண்டும் ...நாக்கு ருசியாய் ...
...வஞ்சிரம் வேண்டும் ...கப்பல் துறைக்கு ...
.....ஆனால் ...சீற்றம் வரும் நேரம் ..சுனாமி வரும் செய்தி ...
...தில்லியில் ..வந்தும் ...ஏன் உங்கள் திண்ணைக்கு வரவில்லை ...........
....மீனவ தேசத்து .... இளவரசே
..கடல் தான் நம் மூச்சு ...
...படகுதான் நம் வாழ்க்கை ...
..கரைதான் நம் சொந்தம் ...
...மீன்தான் நம் மூலதனம் ....போராடு கடலில் ...
.....சோறு போடு கரையில் ....
.....வரலாற்றில் நம் முன்னோர் இதைவிட ...
பெரிய சுனாமியை ..எட்டி உதைத்து கட்டிய குப்பம் இது ...
...இந்த சிறு அலை என்ன செய்யும் உன் ஊரை ...
..அதோ அந்தமான் விளக்கொளி ...அடர்த்தியாய் ....
...சொந்தத்தை அழைத்து சூறையாடு கடலை ....
...கலங்கரை விளக்கங்கள் கண்சிவந்தழும் ...
..கடலில் நீ இல்லாதது கண்டு .....
..அதன் கண்ணீர் துடைத்து ....முத்தம் கொடு
... உன் படகின்கொடி பட்டு சிதறும் ஒலிகற்றையால் .............
ஒவ்வொரு அடி ஆழம் நீ நுழயும்போதும்...
....என் மென்மனம் ஊரும் உன் நினைவில் ... ..சேரில் கிடக்கும் கெளுத்தி போல் .......
.....இன்னும் ஒருமுறை சுனாமி வந்தால் ..... ...........
..................எழவு சொல்வோம் கடல் தாய்க்கு ..............
.....கரைக்கு இனி கண்ணீர் இல்லை ....
...தாய்க்கு நீ தலை பிள்ளை ...கடல் தாய்க்கு நீ தலை பிள்ளை ...
.....
....நீ துடுப்பு போடும் சத்தத்தில் ...எங்கள் மீனவரின் அடுப்பு எரியும் ....
..நீ துள்ளி பிடிக்கும் மீன் வந்தால் கரையில் நம் அருமை புரியும் ....
.................அன்று என் கவிதை ...கடலையோ ....அல்ல அலையோ ...பற்றி அல்ல...
..உன் கருத்த மேனியில் .. படர்ந்து பூக்கும் ...உப்புபூ ....பூத்த அதிசயம் பற்றிதான் .....
.........................சுனாமியின் முகவரிக்கும் சூடாய் அனுப்புவேன் உன் வீரம் பற்றி ...........
இப்படிக்கு ...........
...............நெய்தல் திணையின் நினைவில் ...வாடும் ..
...............இங்கொரு மருத நாட்டு கருப்பன் ....வீரமணி ...............
...
பாசக்காரன் வீரமணி
புது தில்லி ,
இந்தியா.
...கரையை கல்லரயாக்கிய...சுமத்ரா அனுப்பியே எழவே ....
....தூங்கு மூஞ்சி அதிகாரிகள் விழித்த பின் வந்திருந்தால்..
...மீந்த உயரின் எண்ணிக்கை ..மேலாகியிருக்கும் ....
.....பிணத்தின் மேல் பணம் என்னும் கொள்ளை பார்...
...அரசின் ஆயுதம் சிரிக்கும் காந்தி முகத்தில் சிக்கி கொண்டது ....
..நாசிக் பேப்பர் நாத்தம்...பிணை நாத்தத்தை...சந்தன மனமாக்கிற்று...
...இறந்தவர் பெயரில் வாழும் இந்திய நிர்வாகம் ....
....சிந்திய சலுகையில் ..சீர் கேட்டு நிற்கும் பூர்வீகம் ....
.....நெய்தல் தினையே ...புரிதல் வேண்டும் புரட்சி படைக்க ...
....காவல் துறைக்கு மீன் வறுவல் வேண்டும் ...நாக்கு ருசியாய் ...
...வஞ்சிரம் வேண்டும் ...கப்பல் துறைக்கு ...
.....ஆனால் ...சீற்றம் வரும் நேரம் ..சுனாமி வரும் செய்தி ...
...தில்லியில் ..வந்தும் ...ஏன் உங்கள் திண்ணைக்கு வரவில்லை ...........
....மீனவ தேசத்து .... இளவரசே
..கடல் தான் நம் மூச்சு ...
...படகுதான் நம் வாழ்க்கை ...
..கரைதான் நம் சொந்தம் ...
...மீன்தான் நம் மூலதனம் ....போராடு கடலில் ...
.....சோறு போடு கரையில் ....
.....வரலாற்றில் நம் முன்னோர் இதைவிட ...
பெரிய சுனாமியை ..எட்டி உதைத்து கட்டிய குப்பம் இது ...
...இந்த சிறு அலை என்ன செய்யும் உன் ஊரை ...
..அதோ அந்தமான் விளக்கொளி ...அடர்த்தியாய் ....
...சொந்தத்தை அழைத்து சூறையாடு கடலை ....
...கலங்கரை விளக்கங்கள் கண்சிவந்தழும் ...
..கடலில் நீ இல்லாதது கண்டு .....
..அதன் கண்ணீர் துடைத்து ....முத்தம் கொடு
... உன் படகின்கொடி பட்டு சிதறும் ஒலிகற்றையால் .............
ஒவ்வொரு அடி ஆழம் நீ நுழயும்போதும்...
....என் மென்மனம் ஊரும் உன் நினைவில் ... ..சேரில் கிடக்கும் கெளுத்தி போல் .......
.....இன்னும் ஒருமுறை சுனாமி வந்தால் ..... ...........
..................எழவு சொல்வோம் கடல் தாய்க்கு ..............
.....கரைக்கு இனி கண்ணீர் இல்லை ....
...தாய்க்கு நீ தலை பிள்ளை ...கடல் தாய்க்கு நீ தலை பிள்ளை ...
.....
....நீ துடுப்பு போடும் சத்தத்தில் ...எங்கள் மீனவரின் அடுப்பு எரியும் ....
..நீ துள்ளி பிடிக்கும் மீன் வந்தால் கரையில் நம் அருமை புரியும் ....
.................அன்று என் கவிதை ...கடலையோ ....அல்ல அலையோ ...பற்றி அல்ல...
..உன் கருத்த மேனியில் .. படர்ந்து பூக்கும் ...உப்புபூ ....பூத்த அதிசயம் பற்றிதான் .....
.........................சுனா
இப்படிக்கு ...........
...............நெய்தல் திணையின் நினைவில் ...வாடும் ..
...............இங்கொரு மருத நாட்டு கருப்பன் ....வீரமணி ...............
...
பாசக்காரன் வீரமணி
புது தில்லி ,
இந்தியா.
No comments:
Post a Comment