Sunday, November 28, 2010

சென்னை சாலையில் எங்கள் சுடுகாடு .............


சென்னை சாலையில் எங்கள் சுடுகாடு .............

காஞ்சி மாநகரில் ....ஹிந்து சங்கு முழக்கத்தில் ...
....இறுக்கமானது பறைகுடிகளின் வீரரத்தம் .....
.....பூசாரி சொன்னான் ...... மன்னன் வருகிறார் ...வரார் வரார் ...
........கழு மரங்கள் காத்துக்கிடந்தன ...எங்கள் குருதியில் குளித்திட ....

....பறையர் வெட்டி எருமைகளின் மேல் ஏற்றி வந்த அதே மரத்தில் ....
...வரிசையாய் கட்டப்பட்டு ..
...காய்ச்சிய இரும்பு கம்பிகளால் ...மூச்சு விட துடிக்கும் பிள்ளை முதல் ...
....முந்தானை பால் படிந்த பறைச்சி வரை ..
.புழையில் சொருகப்பட்டு ....தன பூர்வீக புலத்திலே பரிநிர்வானமானர்கள் ....

.....அன்று யானை தன் சங்கிலியருத்து...கதறி ஓடியது ....
.....இந்துக்கள் சொன்னர்கள் ...
....ஆஹா யானை மதம் பிடித்து ஓடுகிறது ...என ....
.....யானை நின்று திரும்பி பாலியில் பறைந்தது...
....பிணம் தின்னும் திருடர்களே ...பூர்வீக மக்களை அழிக்கும் ...
....உங்கள் மதம் பிடிக்காமல் நான் ஓடுகிறேன் என்று ...
(மதம் பிடிக்காமலே கோபப்பட்ட முதல் யானை ...காஞ்சி தம்மா யானை )

....அது வரலாறு ....

....சத்யாவாணிமுத்து சொன்னார் சட்டமன்றத்தில் அன்று ....
..குடும்ப கட்டுப்பாடு ..சேரிமக்களை ஒழிக்க சதி என ....
..50 ருபாய் ..ஒரு வேட்டி..ஒரு புடவை அஞ்சிகிலோ அரிசி ....
....மண்ணாங்கட்டி மாமன் கருப்பாயி அக்காவுடன் சென்று ..... ....கட்டிங் செய்துகொண்டார் ....முடிந்தது மூணு வோட்டு ....

....இது 70 களில் ....எங்கள் நாடு

மிச்ச மீதி கூவம் கரையும் ...கூடி நின்றது ...குடும்ப கட்டுப்பாடுக்கு ...
.....சாதி பெயர் கேட்டால்....எல்லாம் ஒன்றே ..பறையன் ..சக்கிலி என ..........
..அடடடா அலுவலர் முதலியோ ..செட்டியோ ...வன்னியனோ ...
....யாரோ ........யாமறியோம் ..பறை(பரா) பரமே ..........

...முடிந்தது முப்பது நாளில் ..சென்னையின் சிறப்பு ...
..பூர்வீக விந்துக்கள் புட்டுகொண்டன ..கூவம் கரையோரம் ............

....வெள்ளை ஆடைகள் ...மாத்திரை பெட்டிகள்...
....மயங்கி மயங்கி நகர்ந்தன ...மாநகரம் தின்று செரிக்காத யாப்பதொடு ...

.....செங்கை மாவட்ட சேரி மக்கள் ....உற்சாகமாய் இருந்தார்கள் ...
...தேசத்தின் பணியை தாமரியாமலே செய்திட ....
...அந்நேரத்தில் ...குடியானவர்கள் ...கூத்தியாளுகோ ..கொண்டவளுக்கோ ...
....கருகொடுக்கும் காம பணியில் திளைதிருக்கலம் ......

.........தமிழகம் முழுதும் சேரிகளில் ...வெள்ளை வேட்டி...வண்ணபுடவை ...
......கிழிந்து போனது மறு நாள் சேடய்யில்.....அழிந்து போன தலைமுரைபோல் ....
..............அலுமினிய குண்டானோடு ....வரிசையாய் நின்றார்கள் ...அடுத்த நாள் ....
.............ஏண்டி முனியம்மா ...சின்ன ஆண்ட மவளுக்கு ..ஆண்குழந்தயாம் ...
...சோறு போடறாங்க வாங்கடி....
... அந்த சின்ன ஆண்ட பேரன் ..70 வயது தங்கலானை ...
.............டேய் தங்க்லான் ...மடை மாறு ...இன்றான்...ஐயோகோ ........

இழக்க ஒண்ணுமில்லை அனுபவிக்க அழகான உலகம் ...
....செப்பினான் கார்ல் மார்க்ஸ் ...என்ற தாடிக்காரன் ....
...இங்கே சேரி மக்களை இழைத்து சென்னையில் உருவாகும் ...
......மஞ்சள் துண்டுக்காரனின் மாயஜாலம் .......பார்க்க வாரீர்

சென்னையில் நாங்கள் படும்பாடு .............
செத்தபின்னும் உடன் வரும்பாரு ...
.....சுடுகாடு கட்ட சேரிக்கு ஒதிக்கிய பணத்தில் ...
...தலைமைச்செயலகம் ....சரியா தவறா ....
..சரிதாண்டா கிழவா .....முறைதாண்டி வரையா...

...80 ,90 இல் .....எங்கள் நாடு

..............மார்வாடி பெண்கள் படகோட்ட ...
....அடையாறு நதி அழகான கதைகேள் ......

..... எங்கள் கன்னிப்பெண்கள் குளித்திட ..
..ஊரே பார்க்கும் இலவச கழிப்பிடம் .......
.....சென்னை நகரம் உங்கள் நகரம் ....மாட்டிவிட்டார்கள்..போர்டை
...மாநகர காவலர்கள் .....
...கருவாடு வித்த அன்தொனியம்மாளை...
...மகளிர் காவலில் மானம் எடுத்தார்கள் .....

..........இவர்கள் கருணாநிதி போகும் கடற்கரை சாலையில் ...
...முலை காட்டி நிற்கும் கண்ணகியோடு முட்டிவளிக்க நிற்பார்கள் .............
..ஜெயலிதா வீட்டுக்கு செக்குமாடாய் உழைப்பார்கள் ....
...
...சேரி மக்களென்றால்.....சினம் கொண்டு அழிப்பார்கள் ......
.....
துரைப்பாக்கம்... எக்கியம் ....
...புறநகர் .......வெளிநகர் ...என ..
குப்பை கொட்டும் பகுதிகளில் கொட்டப்படோம் ...நாங்களும் ....

....கூலி முழ்தும் பஸ்கும்...சோத்துக்கும் பத்தல....
.........காலநீடினா...கைகுழந்த மூஞ்சில் பெருவிரல் ...
.....பேலவும் ...கழவவும் ...மூணு வூட்டுக்கு ஒரு ..ரூமு ....
...ஆக நாங்கள் அடித்துக்கொள்ள ...செய்த நிர்வாக சதி .....

............ஓவென ..அழுகிறோம் ....
.....ஐயோ என கதறுகிறோம் .....
.......வெட்டவெளியில் சிறைய்டப்பட்டு ...செத்துமடிகிறோம்...........
..மூச்சி விடாது சில நொடி கிடந்தால்...
....பிணம் என எங்களுக்கு பெயரிடும் ........மாநகர குப்பை வண்டிகள் ..
...எனன செய்வது ...எனன செய்ய ...உறுப்பு மூடிய பிணம்தான் நாங்கள் ...
.........
எத்தனை முறை ...எங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ..
.....செத்தபின்பும்...புதைத்திட ...
...தந்த பணத்தில் ...இடத்தில .....
நீங்கள் ஆட்சி நடத்த ...மாளிகை கட்டிக்கொண்டால் ...
....நாங்கள் பிணம் எரிக்கவும் ...புதைக்கவும் ...
...அதையே பயன் படுத்துவோம் ............

.....டேய் கொலகாரா ....குருடா ,,,,
....குடும்ப அரசியல் நடத்தும் ....கோமாளி ....
...திருடா......சேரி மக்கள் எனன ...
.....மலிவு விலை சரக்கா....மூட்டையில் கட்டி ...சந்தையில் பூட்ட .........

...அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையை ....
.....உன் ஆட்சி முடியும் முன் மாற்றி வைத்துடு...
...அல்ல ...உன் குடும்பம் ,,பிச்சஎடுக்கபோகும் ...குவளை ஊருக்கு ...எடுத்துபோ ...
....எங்கள் பிணம் போகும் பாதை ...பாடையை தடுக்கிறது .. அவன் சிலை ...............

......நாங்கள் உன்னால் பினமாணோம் ....
..............இனி என் தலைமுறை எழுகிறது ...
.உன் மகனுக்கு கொடி பிடிக்க அல்ல ...
....அல்ல அந்த பட்டத்து...யானைக்கு பீதாம்பரம் வீச அல்ல ............

...........எங்கள் எண்ணிகையை கண்டு ...எதிரிகளை தின்று ....
.............எம்மில் இப்போது உனக்கு விளக்கு பிடிக்கும் அடிமைகளை வென்று .........
......கோட்டையில் ..பறக்கும் உன் சூத்து துடைக்கும் துணியை இறக்கி ...

....எண்களின் கண்ணீர் துடைக்கும் .....
...நீலக்கொடி ஏந்தி வரும் யானை பறையும் ...
....அன்று மதம் (இந்து) மதம் பிடிக்காது ஓடிய நான் ....
...........இன்று .என் மக்களுகாக வருகிறேன் என்று .............

பாசக்காரன் வீரமணி




No comments:

Post a Comment