Saturday, January 1, 2011

....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....


....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....
வேட்டுவர் குலம் வாழும் விழல் நிறைந்த ஏரி வழி ...
..பாட்டியின் வீடு விட்டு ..பகல் பொழுதில் எனை தூக்கி
...செடி விளக்கி செந்நெல் புலம் பார்த்து ..
சேடை வாசம் மூக்கு தெளிக்க ...அள்ளி பருகிய ...தண்ணீர் ... அம்மா உனக்கு ...

அழுது அழுது என் கன்னத்தில் கருவெண் கோடு ...
...பொழுதுகள் புரியாது உன் தோல் மேல் தொங்கும் ..நான்கு கிலோ நான் ...
...முறம் வீசி புறம் போகும் பதடு ....உன் கண்ணில் பட்டுதெறிக்க...
....ஓ வென அழுத எனக்கு ஓமவாட்டர்...ஒருபுற முலைப்பால் கிட்டாமல் .....

உன் பாதம் மெதுவாய் ...நான் பாலைவனத்து ஒட்டகபயணிபோல்..
( பாளயத்தாளை ஒண்டி வாழ்ந்த பயணி )
...ஆடி ஆடி ...அயயஹோ உன் வலியறியாது..அம்மா ..
..நீயோ வழியறியாது ....சாராய குடிகாரன் வீடு நோக்கி .....

போய் பேசி வாழும் சாதி நிறைந்த நாட்டில் ...
...மெய் மறந்து வாழும் மெல்லிய புரட்சியா அம்மா ..நம் வாழ்க்கை ,,,,?
..பின் யார் அடித்தது உன்னை ...என் அண்ணா கயிறு வரை கண்ணீர் உருள ....?
....அப்பனா அல்ல அவன் பின் உள்ள சாதி 'வெப்பனா' (Weapon) ....

சர்கார் தந்த கைத்தறி புடவையோடு ...நம் பெண்டியரும் ...
....நாத்தாங்கால் வரை வாழும் வெள்ளை வேட்டியோடு நம் ..ஆண்மகரும் ...
..சமைந்த நொடிக்குள் சாதியில் வறுபடும் ..நம் பெதும்பையரும் ....
...சூத்து தெரிய சூதில்லாது அரைகால் சட்டையோடு நம் மழலையரும் ...
.............மாண்டுபோவமா அம்மா ....? ..
.மீட்டு வருவது யார் நம் சிந்திய வரலாற்றை ...?
...
..அன்று செஷங்கனுர் ரேஷன் கடைக்கு போக ....
..நீ அட்டை எடுக்க தேடினாய் ...சாமி அறையில் ..
.நானும் அட்டைபோல் ஒட்டிகொண்டேன் ..உன் முதுகில் ....
.....மணி பகல் ஒன்னுக்கு மேல் ....தார் சாலையில் உன் கால் உருகியது ....
...பூங்கானம் கௌண்டர் வாய்கால் நீரில் கால் பதித்து ...
..புழுதி வழி நீ போக ..அயயஹோ ...அனல் ...
.............நாபகம் இருக்கிறது ..உன் புடவையை தரையில் போட்டு ...
...................புழு போல் ஒரு அடி இரு அடி என புலம்பி நீ நகர்ந்த புதிய வரலாறு ...........

கார்காலம் பிறந்ததும் கரும்பு சுமக்கும் கூலி வேலை நீ போவாய் ..
...மார்கழி பூசணிக்காய் குழம்பு மரகதம் அக்காளுக்கு நீ கொடுப்பாய்...
...வெள்ளகுலம் மண்வாரி நட்டு வைத்த ஆலமரத்தில் ....
...சொல்லாமல் செத்த சேரி பெண்களின் ஆவிகளை குரி கேட்டு சொல் ...
....அவர்களின் குறி கடித்து குதறிய சாதி வெறி...நம் ஊரிலா உலாவருகிரதென ?

.....திசெம்பர் பூவும் ...பப்பாளியும்...தினம் தினம் கொடுத்தும்....
..பழைய சோத்தோடு காரக்குழம்பு தா என ..கௌண்டர் பெண்ணை அண்ணன் கேக்க ...
...........நாயே உனக்கு என்னதிமிர் என அண்ணனை அடித்தது யார் அம்மா ?
..பின் ரத்தம் கேட்டு ஆச்பிதிரியில் நடு ஆண்ட அழுதபோது ...
............நரசன் சித்தப்பா கொடுத்தது ...சாதியில்லா ...வெண் சீழா?

..அஞ்சாம் வாத்தியார் ...உக்கார உரலை துடைத்து தர ....
....யார் மா..இந்த பொடிப்பயல் என புவனகிரி தமிழில் அவர்கேட்க ...
...சார் ..சார்...என் பதினோராவது புள்ளை என ...வெள்ளக்காரன் மொழியில் நீ சார் சொல்ல ...
......பள்ளிகூடத்தில் அடுத்த வருஷம் அனுப்பு இவனை...
.............அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் அம்மாவின் முந்தானைக்குள்..அடைக்கலம் ..

..மாச பொறப்பு வருஷ பொறப்பு ஆனா போதும் ...
..இந்த சாராயம் குடிகாரன் ..எங்காவது போய் ...சம்பாதிச்சு குடிச்சிடுவான் ...
....ஆண்டில் எப்பாவது சுடும் இட்டிலி வடை அலுப்பில் ......அம்மா ..

....ரோடு போட வைத்த கருங்கல்லை துண்டில் சுருட்டி அடிக்க வரும் அப்பா ...
....ச்சே ..இது மனு உனக்கு சொன்ன பாடமா?
...ஆணாதிக்கத்தின் ...முதல் சூத்திரம் ..இந்துத்துவம் சொன்ன ...பெண்ணடிமை ....
............இது சேரியில் எப்படி தொத்திக்கொண்டது ....
....ஒ! சாராயம் ..சாதி பார்க்காமல் தரும் ..கிராமத்து பொதுஉடமை ஆணாதிக்கம் ...?

...........உடைந்து போனது ..இட்டிலி குண்டானும் ....வடை சட்டியும் ....
...மூட்டிய அடுப்பில் இருந்த மூணு செங்கல் ...
....எதிர் வீட்டில் எறிந்த சவுக்கை விறகில் ....சரணடைந்தது .....
......அம்மா என்னை மட்டும் தூக்கிகொண்டு..மாரியாத்தா கோயில் பக்கம் ஓட ...
...........அண்ணன்கள் சிதறி ஆலமரத்தின் ...வேர் பக்கம் ஒளிந்து கொள்ள ...
..............அப்பாவின் ...தாண்டவம் ...அடடா ...ஆணாதிக்கத்தின் ...ஒரு ..மாதிரி நடனம் .....

...........பாளையம் மட்டுமே அம்மாவுக்கு தெரிந்த ஆறுதல் மாநகரம் .....
........பத்து வயல் வேலி தாண்டி பத்திரமாய் எனை பிடித்து ...
...................ஏரிக்கரை மடுகில் எனை விட்டு ...த...எக்கா எக்கா ...என் ...
....நண்டு ஊமச்சி ...கெளுத்தி என் ...மகிழ்ச்சியில் பெரியம்மா .............
............என்னாடி..குடிகாரன் வேலைய கட்டிடானா வருசபொரப்பில்..............

............பனம்பழம் சுட்டு ...பல் முழுதும் நார் பிடிக்க ...கடித்து தின்னும் கருப்பு மேனிகள் ...
............எனக்கும் தர ....முதன் முதலாய்...நானும் பால் மறந்து தின்ன பனம்பழம் ....
......நண்டு குழம்பு ....ஊமச்சி அவியல் என் என அம்மா...எனக்கும் ஊட்ட ...
.....................அண்ணன்களை நினைத்து அவள் அழுததும் ...எனக்கு அன்றைய வலிகள்...

......அடுப்பில் கிடக்கும் அரை குறை மாவு ...
மல்லாகொட்டை சுடல் ...பனம்பழம் .....
............பைதன்காய்அவியல் ..பப்பாளி காய் ...
பழைய அரிசி ஊறல் ...பிணம் சக்கரை ...
பொரிக்கும் முன் உடைத்த அடை கோழி முட்டை ..
.பொசுக்கி தின்னும் ராமநத்தம் குருவி ...
.........கல்லால் அடித்த கல்லுகுருவி ....
சேரியில் யாரேனும் தந்த யாசக சோறு ....
.....ஓடும் ட்ரக்டரில் ஒடித்து தின்ன கரும்பு ....
முளியமரத்தில் ஒளிந்து சுடும் மரவள்ளி கிழங்கு ....
....அம்பது காசு ...ஒரு ருபாய் ...சேமிப்பில் வாங்கி...
பல் விலகாமல் தின்னும் ...சிகப்பு சேமியா ....
.....என அண்ணன்கள் இந்த காலத்தில் தின்னும் அவசர உணவுகள் ....
................அம்மாவின் கண்ணீற்கு அதுகூட ஒரு காரணமோ ..?

.....திரும்பி ...வீட்டிற்கு அவள் வரும்போது ....திரளாய் மடை உடைந்த கண்ணீர் ............
....ஏரி வழி எனை சுமந்து ......வீட்டை நினைத்து ..அவள் வாட .....
........அண்ணன்கள் ஓடி வர ...அம்மா அம்மா ..என் அழுது புலம்ப ......
..........பாசமென்றால் என்ன என் அந்த பறைச்சி காட்டினாள் அன்று ...
........ஐயோ நான் பெத்த பிள்ளைகளா....முனகல் சத்தமும் ...மூக்கு சிந்தி ...போட ...
....நல்ல தங்காள்............ ...கிணத்தில் போட்டதுபோல் இல்லாமல் ....
எங்களை ..பள்ளியில் போட்டாள்...


ஓல மட்டை ஒழுகும் ..எங்கள் வீட்டுக்கு ...அழைத்து வந்தாள்...எங்களை ....
.................நானும் அவசரத்தில் ..அவள் முலை பால் குடிக்க ......
...............அவளும் புன்னகையோடு ...பிள்ளைகள் பார்த்த ஆவலில் ...
,,,,,,,,,,,,என் கன்னம் ,கழுத்து ,முகம், நெற்றி ,மார்பு ..என்று ...பால் தெறிக்க ...
..................
....நான் பார்த்த ...புத்தாண்டு ...
.......முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ..............................
....


இப்படிக்கு ...........
பாசக்காரன் வீரமணி ...



VEERAMANI .S
Asst. Professor/ Placement Co-ordinator(MIB),
Centre for Management Studies,
Jamia Millia Islamia( A central University),
New Delhi, India.