Sunday, November 6, 2011
Sunday, August 14, 2011
பிணம் தின்னி தேசியவாதம்
பிணம் தின்னி தேசியவாதம்
ஆதி திராவிடனின் கால் பதித்து போட்ட ...
பூமியில் அவன் கொன்று ..
..பூர்வீகத்தை ஆண்டைக்காய் கொலையிடும்
பொல்லாத தேசியவாதம் ....
..தொல்காப்பியன் சொன்னதை ..
..தொலைத்து விட்டு அழும் பறையன் பாணன் முகம் ....!
..நிலம் என்றால் என்ன ?
..முதலி.. கவுண்டன்.. செட்டி ..ரெட்டி ..
...போன்றோரின் கைக்குட்டை காதல் கடிதம் .....
...தொடர்ந்த தோல்வியில் துயிலும் தொண்மை..
..அவைகளை கழுவில் ஏற்றும் கள்வனும் ஒருவன் ?
..நாடகத்தின் பெயர் தேசியவாதம் !
பல் இடுக்கில் தொங்கும் பகட்டு மொழிக்காய்..
..எங்களை பலியிட ஒருவன் ...
சூத்திர பதர்களின் பிடியில் 'ஒரு மாத்திரை' மனிதன் ...
மீந்த சோத்துக்கு நாய்கள் மத்தியில் ...
..போர் இடும் மனிதன் ..சாதி உலகில் ....
...அதை காத்திட இல்லை ..கை மடித்து பேசும் ...
..கருங்காலிகள் கூட்டம் ...
..திருட்டு சான்றிதழில் படித்தவனை...
..இடி தாங்கி என்னும் ..மொழி போதை மனிதன் ...
...காடு வெட்டி கரும்பயல் ஒருவன் ..
..பறையனின் ஆளை வெட்ட ஆணை இடுவான் ...
.....அவனை குடி தாங்கி என்பானாம்...மொழி மயிர் பிடுங்கி !
..களபறையன் ..மல்லன் ...மதுரை வீரனின் ..
பிள்ளையர் பேசும் பாசம் எட்டாத .....உனக்கு ...
.வன்னியன் ..இசை வேளாளன் ...
சொல்லும் வாக்குகள் ...சாரயம் ஊறிய நா போல் .. சீ! சீ ...
...சேரிகளே ..எழுந்திருங்கள் ....
..தூங்கியது போதும் மொழி போதையில் ....
..நிலம் கேட்டு மாநாடு போடுங்கள்
..நித்தரை களையும் ஆண்டைகளுக்கு ...
... பெண் பார்க்க செல்லுங்கள் ஊர்த்தெருவில் ....
..பெயர்ந்து ஓடும் மொழிப்பாசம் ....
...வலங்கை இடங்கை எல்லாம் ...
...புடுங்காமல் அதிரும் வேரருப்பில் ...
கை மாறி போகும் ..வாய் ...சூத்து ....
...
....தேசியம் போட்ட வேலி உள் ....
..திமிரில் உலவும் சாதி மதம் ....
..அவை உடைக்க ஆயுதம் ..சேரிகளில் கிடக்கும் ...
..தோண்டி எடுக்க ...ஆணை இடுங்கள் அவர் அவர் தெருவில் ...
..செங்கையோ ...குமரியோ ...திருச்சியோ ...
...சென்னையோ காஞ்சியோ கோவையோ ....
...மாநாடு அழைப்பர் ஆண்டைகள் ...
...அவர் மச்சி வீட்டு பணம் கரையாது காத்திட !
...சில கருப்பு ஆடுகள் ...பொறுப்பாய் ...
..உங்கள் கரம் பிடித்து அழைப்பர் ...
...தேசியம் என்ற விழத்தை நீங்களே பருகிட ...
..கேள்வி கேளுங்கள் ..
.அய்யா ...ஒரு மொழி என்பீர் ...ஒரு நாடு என்பீர்
...தேசிய வாதம் என்பீர் .
.இனம் என்பீர் ..என்னவன் என்பீர் ...
...ஆனால் ...இதுவரை ..
.பொருளால் ..உணர்வால் ...உறவால் ..
..நிலத்தால் ..நீரால் ..பூமியால் ...
..பிரிந்து கிடக்கிறோமே !
...நாங்கள் போராட்டம் நடத்தினால் ...
..உம் வீட்டில் பொருள் குவியும் அதிசயம் !
..தொண்டை வறண்டு துடித்து யாம் விழின் ...
...உங்கள் கதவு மூடிக்கொள்ளும் ...ஆஹா
......இது என்ன பிணம் தின்னி தேசியவாதமா ?
..நெற்றி பொட்டில் கட்டிகொல்வோம் ...கொடி
..நெடுந்தூரம் நடப்போம் ஓடி ...
...ஆர்ப்பரிப்போம் ...அவா கொள்வோம் ...
...அண்ணன் என்போம் ...தம்பி என்போம் ...
....கூட்டம் முடிந்ததும் ...
...கூரைகள் கீழ் கரைவோம் ...பூச்சிகளாய்...
...நாங்கள் சிங்கம் என யாரேனும் சொன்னால் ...
..சினம் கொள்வார் தேசிய தமிழ் ஆண்டைகள் ...
...நீல நூல் படித்து அண்ணல் அம்பேத்கர் ..
..எமை சிங்கம் என்றார் ...
..என ஆசைகொள்வோம் வாழ்ந்திட ...
......ச்சே ச்சே அவர் மராத்தி காரர் ...
..என்பர் ஆந்திர நாயிடுகளும் ...
..கன்னட முதலியார்களும் .......
.....தமிழ் நிலத்தில் ...முத்துவேல் மகனுக்கு ..
...மார்வாடி மருமவன்கள்....
...மைசூர் ராணிக்கு ...குற்ற பரம்பரை ..தொப்புள் சொந்தம் ...
...செத்து போன் இராமச்சந்திரன் ..
.சேரியில் ஓட்டை பொறுக்கும் செந்தமிழ் நாடு ....
..மனை விற்பனை என்ற பெயரில் ...
..சேரி மண்ணை விற்கிறான் தமிழன் ...
..இனம் என்ற பெயரில் .
.சேரி பெண்களின் சீலை மட்டும் குருதி புணரும் ...
...தம்பி என்பான் தமிழில் ...தம்ளர் மட்டு தனி !
..அண்ணன் என்பான் சேரி ஏஜெண்டுகளை ...
...அட அவன் ஒரு ஆளா ? என்பான் அடுத்த நொடி !
...இரு முலைகளை வெட்டியபோதும் ...
..இலைகளுக்கே ..ஓட்டு ....
..அடி மடியில் கை வைத்தும் ...
'கை' தான் ஆளும் ..நாட்டை
....போதை மருந்து வியாபாரம் !
..சிங்களவன் கொள்கிறான் ..என சொல்லி ...
...சேரிகளை கொள்ளுகிறான் ..தமிழன் ...
..தேசிய பாது காப்பு சட்டத்தில் ...சிதம்பரம்
...சூத்திரனின் பெயர் இல்லா பட்டியல் ...
..காவல் நிலையம் ...வன்னியனுக்கும் .
.வாண்டயானுக்கும் ...காதல் நிலையம் !!
..கடலூர் மாவட்டத்தில் ..கதறி அழும் பறைச்சி ...
.....தமிழுக்கு கிடைத்த சேரி இறைச்சி !
.....துப்பாக்கிகள் கூட சாதி பார்த்த தேசியவாதம் ...
...மலையகத்தில் மாண்டு விழும் அனாதை ஆதிகள் ....
...தொடை நடுங்கி பயல்கள் ..
...பேசும் வெளிநாட்டு இன உணர்வு !
....பல்லாயிரம் ஆண்டுகள் சுமந்தோம் ...
..மதம் எனும் பல்லக்கு ...
..பல நூறு ஆண்டுகள் தோள் கொடுத்தோம் ..
...மொழி ..இன போதைக்கு ...
...பல நூறு நாட்கள் சிறையில் கிடந்தோம் ...
..சூத்திரர் பொருள் சேர்த்திட ....
...பல பொழுதில் போராடி மட்டுமே
. இறந்திடும் வாழ்க்கை எம் உலகில் ,.....
...நாங்கள் நூறாய் எழுபதுகளில் ...
...ஆயிரமாய் தொண்ணுறுகளில் ..
..லட்சமாய் இரண்டாயிரத்தில் ...
...கோடியாய் ...இன்று ..கொலை சிந்து பாடுகிறோம்
..மொழி ..இனம் .....என் குலம் அழித்த காரணி ....
......இதை இன்னும் அறியாத சேரியே ! நீ யார் அணி ?
....பார்ப்பனர் எதிர்ப்பு என்றன் ...
பகல் பொழுதிலே அலகு குத்தும் சூத்திர இந்து ...
...இந்து மதம் ஒழிப்பே விடுதலை என்றான் ...
...கோவில்களில் நிற்க இடமில்லை சாமிக்கே !
..ஆடி பூசம் ...பங்குனி உத்திரம் ..
..கார்த்திகை தீபம் ...சனிபெயர்ச்சி ...
...குறு திசை ..குலம் ..கோத்திர ராசி ...
...பல் விளக்காமல் பார்க்கும் ..பராசக்தி தொலைகாட்சி ..
.....பண்பாடு என்ற பெயரில் தமிழ் வாயில்... இந்து பிய் ....
......
...என பார்ப்பனர் ஓடிவிட்ட ...
..சூத்திர தேசத்தில் ...நாத்திகன்கள் ஆடும் ..
..இந்து -தமிழ் -இன - மொழி -சுவருக்குள் ...
..அரங்கேறும் தேசிய தேனிலவு ....
....அதில் ஊசிபோனே ஒரு சொல் மந்திரம் ...திராவிட நாடு !
..ஆதி திராவிடன் ..யாம் என்றால் ...
...அப்படிஎன்றால் ? ..என கட்டபொம்மன் போல் கேட்கும் ...
...களவானி தேசியவாதிகள் !
......களை பறித்தாயா? நடவு நட்டாயா...
..கற்பழித்தபின் ..சேரி பெண்டிற்கு தாலி கட்டினையா?
..மாமனா ? மச்சானா ?..மானம் கெட்டவனே ?
..பிய் திணித்த வழக்கில் சிறை சென்றாயா?
...கழுத்தறுத்த வழக்கில் கம்பி எண்ணினாயா ?
..ஏன் கேட்கிறாய் சேரியில் ஓட்டு !
..எதற்கு அழைக்கிறாய் ..தேசிய மாநாட்டுக்கு ?
......
.......வெள்ளையனே வெளியேறு என்றான் ....
...நிலத்தை அவன் பிடித்து ...
..நாட்டை சூறையாடியதால் ....
..வெள்ளாலனே வெளியேறு என்றால் ...
...மறு நாள் ..பொது மருத்துவ மனையில் .
....சேரி சடலம் ....அயயஹோ ....
....சேரிக்கு வெள்ளையன் வெள்ளாலனே...
...அவனை செருக்கு கொண்டு அடிப்போம் நிலம் மீட்க !
...எங்கள் சுடுகாட்டில் ...
..தனித்தே போகும் சனியில் செத்த பிணம் கூட !
...சறுக்கு விளையாட்டு ...சட்டமன்றத்தில் ..
..தலித்துகள் விஷயம் சொல்லும் பொழுது ...
....முதுகெலும்பை கொணர்ந்து காக்கும் ...
..சேரி இப்ப்பூமியை ...
...மூச்சின்றி உழைக்கும் கறுப்பன்கள் நிலத்தில் ...
...முறம் வீசி இசை போடும் பறைச்சியவள் தாலாட்டு ...
...முனகி முயன்று நடக்க தொடங்கும் நாகரிகம் ...
...நாங்கள் இல்லாது போனால் இல்லை இப்பூமி ...
....பின் என்ன ?
பிணம் தின்ன ...பெயர் பட்டியல் போடும் ..
...திமிர் தேசியவாதம் ...
..அதற்கு விளக்கு ஏந்தும் ...
..வெளுத்து போன கருத்த சில கரும்புள்ளிகள் ...
...
.....தூசு தட்டி எடுத்த வரலாறு ..
...இன்று எரியும் தழலில் விழும் கனம் ...
...வேடிக்கை பார்க்க ..நாங்கள் ...
...மொழி வெறியர்கள் அல்ல ?
...புது வழி படைக்கும் ..புத்தன் தந்த பொறிகள் !!!!
...எரிந்து கொண்டே இருக்கும் .
.எமை எரிக்க நினைக்கும் ...
...பொய் மனிதர் புரிந்து புத்தம் புகும் வரை.....
.....இன்று மொழிபோரில் இறந்த சேரி ....
....இன்று இனபோரில் மடிந்த மக்கள் ...
...நாளை எழுந்து கொள்வார் ...
..அரக மரத்தின் அடியில் பிக்குகளாய்.....
....புன்னகை புடுங்கி தின்ற பொல்லாத ..இந்து மதம் ...
...தன் பொச்சி கழுவ நீரின்றி கங்கை ஓடும் ....
....தமிழில் கலந்த இந்து விழத்தை ...
...கண்டு பிரிக்கும் கருத்தை ..
...சமணர் தீட்டிய கோடுகள் சொல்லும் ....
....தமிழில் கலந்த சேரி குடியை ...
...பாலி-பிரிக்கும் என்னபரவையாய் ...தம்மம் இருக்கும் ...
......வழிபாடு ....உரிமை ...போராட்டம் ...
....ரத்தம் ...போர் ...சண்டை ....குருதி ...
...என ...இந்து முறை இல்லாமல் .
..இந்த முறை இருக்கும் ...
....
...மொழி ..இனம் ...வெறி என ..இல்லாது ...
...மனிதன் ...செல்லும் நடு பாதயை ...
...படைக்கும் வல்லமை ...இயற்கை ...
...அது வந்தனப்பொய்கை ......
...வலிமையான கொள்கை .....
....மனிதம் தின்னும் தேசியத்தை ...கேள்வி கேட்டு ...
...மாயை சொல்லும் மொழி தன் செவில் உடைத்து ...
....கோவில் நுழைய போராட்டம் இன்றி ..
அந்த தத்துவத்தை வேரோடு புரட்டும் ...
....தம்ம புரட்சியில் ...தடம் கொண்டு ஓடிட ...
...
....இதோ தனியாய் ஒலிக்கும் தம்ம பறையில் ..
...வங்ககடல் எழும் ....வா என் சேரியே ...
.....கேள்வி மட்டும் கேள் ...நீ யார் என ?
...பதில் வரும் முன் ...பாசம் வந்திடும் ...
....
.......போதி இலை ஒளியில் முகம் கழுவி ...
...ஆதி ஆதி என சொல்லும் சொல்லில் ...
...அரகன் உதிர்கின்றான் பார் ...
...அவன் சாதி மதம் அற்ற சாக்கிய போர் வீரன் ...
...அவன் போரில் மாண்டவர்கள் ...
...மனிதர்கள் யாருமில்லை ...
....மனித உருவில் உலவும் மனம் கொண்ட மிருகங்கள் ...
....
.....தமிழ் அங்குலிமாலாக்கள்...
..தலை குனியும் நாளை ... தம்ம பதம் சொல்லும் ...
.....அதில் சேரி தலைமுறை வெல்லும் ......
...வெறி இறந்து போய் ...முறை வளரும் ....
....
மதமும் சாதியும்
..மொழியும் ...இனமும் ...
..தம் வெறிக்கதவை மூடிக்கொள்ளும்
..தம்ம முறை.... இதயம் செல்லும் ...
..அதையே ......என் பறை பாடி சொல்லும் ...
வீரமணி
இணைபேராசிரியர்
டெல்லி
ஆதி திராவிடனின் கால் பதித்து போட்ட ...
பூமியில் அவன் கொன்று ..
..பூர்வீகத்தை ஆண்டைக்காய் கொலையிடும்
பொல்லாத தேசியவாதம் ....
..தொல்காப்பியன் சொன்னதை ..
..தொலைத்து விட்டு அழும் பறையன் பாணன் முகம் ....!
..நிலம் என்றால் என்ன ?
..முதலி.. கவுண்டன்.. செட்டி ..ரெட்டி ..
...போன்றோரின் கைக்குட்டை காதல் கடிதம் .....
...தொடர்ந்த தோல்வியில் துயிலும் தொண்மை..
..அவைகளை கழுவில் ஏற்றும் கள்வனும் ஒருவன் ?
..நாடகத்தின் பெயர் தேசியவாதம் !
பல் இடுக்கில் தொங்கும் பகட்டு மொழிக்காய்..
..எங்களை பலியிட ஒருவன் ...
சூத்திர பதர்களின் பிடியில் 'ஒரு மாத்திரை' மனிதன் ...
மீந்த சோத்துக்கு நாய்கள் மத்தியில் ...
..போர் இடும் மனிதன் ..சாதி உலகில் ....
...அதை காத்திட இல்லை ..கை மடித்து பேசும் ...
..கருங்காலிகள் கூட்டம் ...
..திருட்டு சான்றிதழில் படித்தவனை...
..இடி தாங்கி என்னும் ..மொழி போதை மனிதன் ...
...காடு வெட்டி கரும்பயல் ஒருவன் ..
..பறையனின் ஆளை வெட்ட ஆணை இடுவான் ...
.....அவனை குடி தாங்கி என்பானாம்...மொழி மயிர் பிடுங்கி !
..களபறையன் ..மல்லன் ...மதுரை வீரனின் ..
பிள்ளையர் பேசும் பாசம் எட்டாத .....உனக்கு ...
.வன்னியன் ..இசை வேளாளன் ...
சொல்லும் வாக்குகள் ...சாரயம் ஊறிய நா போல் .. சீ! சீ ...
...சேரிகளே ..எழுந்திருங்கள் ....
..தூங்கியது போதும் மொழி போதையில் ....
..நிலம் கேட்டு மாநாடு போடுங்கள்
..நித்தரை களையும் ஆண்டைகளுக்கு ...
... பெண் பார்க்க செல்லுங்கள் ஊர்த்தெருவில் ....
..பெயர்ந்து ஓடும் மொழிப்பாசம் ....
...வலங்கை இடங்கை எல்லாம் ...
...புடுங்காமல் அதிரும் வேரருப்பில் ...
கை மாறி போகும் ..வாய் ...சூத்து ....
...
....தேசியம் போட்ட வேலி உள் ....
..திமிரில் உலவும் சாதி மதம் ....
..அவை உடைக்க ஆயுதம் ..சேரிகளில் கிடக்கும் ...
..தோண்டி எடுக்க ...ஆணை இடுங்கள் அவர் அவர் தெருவில் ...
..செங்கையோ ...குமரியோ ...திருச்சியோ ...
...சென்னையோ காஞ்சியோ கோவையோ ....
...மாநாடு அழைப்பர் ஆண்டைகள் ...
...அவர் மச்சி வீட்டு பணம் கரையாது காத்திட !
...சில கருப்பு ஆடுகள் ...பொறுப்பாய் ...
..உங்கள் கரம் பிடித்து அழைப்பர் ...
...தேசியம் என்ற விழத்தை நீங்களே பருகிட ...
..கேள்வி கேளுங்கள் ..
.அய்யா ...ஒரு மொழி என்பீர் ...ஒரு நாடு என்பீர்
...தேசிய வாதம் என்பீர் .
.இனம் என்பீர் ..என்னவன் என்பீர் ...
...ஆனால் ...இதுவரை ..
.பொருளால் ..உணர்வால் ...உறவால் ..
..நிலத்தால் ..நீரால் ..பூமியால் ...
..பிரிந்து கிடக்கிறோமே !
...நாங்கள் போராட்டம் நடத்தினால் ...
..உம் வீட்டில் பொருள் குவியும் அதிசயம் !
..தொண்டை வறண்டு துடித்து யாம் விழின் ...
...உங்கள் கதவு மூடிக்கொள்ளும் ...ஆஹா
......இது என்ன பிணம் தின்னி தேசியவாதமா ?
..நெற்றி பொட்டில் கட்டிகொல்வோம் ...கொடி
..நெடுந்தூரம் நடப்போம் ஓடி ...
...ஆர்ப்பரிப்போம் ...அவா கொள்வோம் ...
...அண்ணன் என்போம் ...தம்பி என்போம் ...
....கூட்டம் முடிந்ததும் ...
...கூரைகள் கீழ் கரைவோம் ...பூச்சிகளாய்...
...நாங்கள் சிங்கம் என யாரேனும் சொன்னால் ...
..சினம் கொள்வார் தேசிய தமிழ் ஆண்டைகள் ...
...நீல நூல் படித்து அண்ணல் அம்பேத்கர் ..
..எமை சிங்கம் என்றார் ...
..என ஆசைகொள்வோம் வாழ்ந்திட ...
......ச்சே ச்சே அவர் மராத்தி காரர் ...
..என்பர் ஆந்திர நாயிடுகளும் ...
..கன்னட முதலியார்களும் .......
.....தமிழ் நிலத்தில் ...முத்துவேல் மகனுக்கு ..
...மார்வாடி மருமவன்கள்....
...மைசூர் ராணிக்கு ...குற்ற பரம்பரை ..தொப்புள் சொந்தம் ...
...செத்து போன் இராமச்சந்திரன் ..
.சேரியில் ஓட்டை பொறுக்கும் செந்தமிழ் நாடு ....
..மனை விற்பனை என்ற பெயரில் ...
..சேரி மண்ணை விற்கிறான் தமிழன் ...
..இனம் என்ற பெயரில் .
.சேரி பெண்களின் சீலை மட்டும் குருதி புணரும் ...
...தம்பி என்பான் தமிழில் ...தம்ளர் மட்டு தனி !
..அண்ணன் என்பான் சேரி ஏஜெண்டுகளை ...
...அட அவன் ஒரு ஆளா ? என்பான் அடுத்த நொடி !
...இரு முலைகளை வெட்டியபோதும் ...
..இலைகளுக்கே ..ஓட்டு ....
..அடி மடியில் கை வைத்தும் ...
'கை' தான் ஆளும் ..நாட்டை
....போதை மருந்து வியாபாரம் !
..சிங்களவன் கொள்கிறான் ..என சொல்லி ...
...சேரிகளை கொள்ளுகிறான் ..தமிழன் ...
..தேசிய பாது காப்பு சட்டத்தில் ...சிதம்பரம்
...சூத்திரனின் பெயர் இல்லா பட்டியல் ...
..காவல் நிலையம் ...வன்னியனுக்கும் .
.வாண்டயானுக்கும் ...காதல் நிலையம் !!
..கடலூர் மாவட்டத்தில் ..கதறி அழும் பறைச்சி ...
.....தமிழுக்கு கிடைத்த சேரி இறைச்சி !
.....துப்பாக்கிகள் கூட சாதி பார்த்த தேசியவாதம் ...
...மலையகத்தில் மாண்டு விழும் அனாதை ஆதிகள் ....
...தொடை நடுங்கி பயல்கள் ..
...பேசும் வெளிநாட்டு இன உணர்வு !
....பல்லாயிரம் ஆண்டுகள் சுமந்தோம் ...
..மதம் எனும் பல்லக்கு ...
..பல நூறு ஆண்டுகள் தோள் கொடுத்தோம் ..
...மொழி ..இன போதைக்கு ...
...பல நூறு நாட்கள் சிறையில் கிடந்தோம் ...
..சூத்திரர் பொருள் சேர்த்திட ....
...பல பொழுதில் போராடி மட்டுமே
. இறந்திடும் வாழ்க்கை எம் உலகில் ,.....
...நாங்கள் நூறாய் எழுபதுகளில் ...
...ஆயிரமாய் தொண்ணுறுகளில் ..
..லட்சமாய் இரண்டாயிரத்தில் ...
...கோடியாய் ...இன்று ..கொலை சிந்து பாடுகிறோம்
..மொழி ..இனம் .....என் குலம் அழித்த காரணி ....
......இதை இன்னும் அறியாத சேரியே ! நீ யார் அணி ?
....பார்ப்பனர் எதிர்ப்பு என்றன் ...
பகல் பொழுதிலே அலகு குத்தும் சூத்திர இந்து ...
...இந்து மதம் ஒழிப்பே விடுதலை என்றான் ...
...கோவில்களில் நிற்க இடமில்லை சாமிக்கே !
..ஆடி பூசம் ...பங்குனி உத்திரம் ..
..கார்த்திகை தீபம் ...சனிபெயர்ச்சி ...
...குறு திசை ..குலம் ..கோத்திர ராசி ...
...பல் விளக்காமல் பார்க்கும் ..பராசக்தி தொலைகாட்சி ..
.....பண்பாடு என்ற பெயரில் தமிழ் வாயில்... இந்து பிய் ....
......
...என பார்ப்பனர் ஓடிவிட்ட ...
..சூத்திர தேசத்தில் ...நாத்திகன்கள் ஆடும் ..
..இந்து -தமிழ் -இன - மொழி -சுவருக்குள் ...
..அரங்கேறும் தேசிய தேனிலவு ....
....அதில் ஊசிபோனே ஒரு சொல் மந்திரம் ...திராவிட நாடு !
..ஆதி திராவிடன் ..யாம் என்றால் ...
...அப்படிஎன்றால் ? ..என கட்டபொம்மன் போல் கேட்கும் ...
...களவானி தேசியவாதிகள் !
......களை பறித்தாயா? நடவு நட்டாயா...
..கற்பழித்தபின் ..சேரி பெண்டிற்கு தாலி கட்டினையா?
..மாமனா ? மச்சானா ?..மானம் கெட்டவனே ?
..பிய் திணித்த வழக்கில் சிறை சென்றாயா?
...கழுத்தறுத்த வழக்கில் கம்பி எண்ணினாயா ?
..ஏன் கேட்கிறாய் சேரியில் ஓட்டு !
..எதற்கு அழைக்கிறாய் ..தேசிய மாநாட்டுக்கு ?
......
.......வெள்ளையனே வெளியேறு என்றான் ....
...நிலத்தை அவன் பிடித்து ...
..நாட்டை சூறையாடியதால் ....
..வெள்ளாலனே வெளியேறு என்றால் ...
...மறு நாள் ..பொது மருத்துவ மனையில் .
....சேரி சடலம் ....அயயஹோ ....
....சேரிக்கு வெள்ளையன் வெள்ளாலனே...
...அவனை செருக்கு கொண்டு அடிப்போம் நிலம் மீட்க !
...எங்கள் சுடுகாட்டில் ...
..தனித்தே போகும் சனியில் செத்த பிணம் கூட !
...சறுக்கு விளையாட்டு ...சட்டமன்றத்தில் ..
..தலித்துகள் விஷயம் சொல்லும் பொழுது ...
....முதுகெலும்பை கொணர்ந்து காக்கும் ...
..சேரி இப்ப்பூமியை ...
...மூச்சின்றி உழைக்கும் கறுப்பன்கள் நிலத்தில் ...
...முறம் வீசி இசை போடும் பறைச்சியவள் தாலாட்டு ...
...முனகி முயன்று நடக்க தொடங்கும் நாகரிகம் ...
...நாங்கள் இல்லாது போனால் இல்லை இப்பூமி ...
....பின் என்ன ?
பிணம் தின்ன ...பெயர் பட்டியல் போடும் ..
...திமிர் தேசியவாதம் ...
..அதற்கு விளக்கு ஏந்தும் ...
..வெளுத்து போன கருத்த சில கரும்புள்ளிகள் ...
...
.....தூசு தட்டி எடுத்த வரலாறு ..
...இன்று எரியும் தழலில் விழும் கனம் ...
...வேடிக்கை பார்க்க ..நாங்கள் ...
...மொழி வெறியர்கள் அல்ல ?
...புது வழி படைக்கும் ..புத்தன் தந்த பொறிகள் !!!!
...எரிந்து கொண்டே இருக்கும் .
.எமை எரிக்க நினைக்கும் ...
...பொய் மனிதர் புரிந்து புத்தம் புகும் வரை.....
.....இன்று மொழிபோரில் இறந்த சேரி ....
....இன்று இனபோரில் மடிந்த மக்கள் ...
...நாளை எழுந்து கொள்வார் ...
..அரக மரத்தின் அடியில் பிக்குகளாய்.....
....புன்னகை புடுங்கி தின்ற பொல்லாத ..இந்து மதம் ...
...தன் பொச்சி கழுவ நீரின்றி கங்கை ஓடும் ....
....தமிழில் கலந்த இந்து விழத்தை ...
...கண்டு பிரிக்கும் கருத்தை ..
...சமணர் தீட்டிய கோடுகள் சொல்லும் ....
....தமிழில் கலந்த சேரி குடியை ...
...பாலி-பிரிக்கும் என்னபரவையாய் ...தம்மம் இருக்கும் ...
......வழிபாடு ....உரிமை ...போராட்டம் ...
....ரத்தம் ...போர் ...சண்டை ....குருதி ...
...என ...இந்து முறை இல்லாமல் .
..இந்த முறை இருக்கும் ...
....
...மொழி ..இனம் ...வெறி என ..இல்லாது ...
...மனிதன் ...செல்லும் நடு பாதயை ...
...படைக்கும் வல்லமை ...இயற்கை ...
...அது வந்தனப்பொய்கை ......
...வலிமையான கொள்கை .....
....மனிதம் தின்னும் தேசியத்தை ...கேள்வி கேட்டு ...
...மாயை சொல்லும் மொழி தன் செவில் உடைத்து ...
....கோவில் நுழைய போராட்டம் இன்றி ..
அந்த தத்துவத்தை வேரோடு புரட்டும் ...
....தம்ம புரட்சியில் ...தடம் கொண்டு ஓடிட ...
...
....இதோ தனியாய் ஒலிக்கும் தம்ம பறையில் ..
...வங்ககடல் எழும் ....வா என் சேரியே ...
.....கேள்வி மட்டும் கேள் ...நீ யார் என ?
...பதில் வரும் முன் ...பாசம் வந்திடும் ...
....
.......போதி இலை ஒளியில் முகம் கழுவி ...
...ஆதி ஆதி என சொல்லும் சொல்லில் ...
...அரகன் உதிர்கின்றான் பார் ...
...அவன் சாதி மதம் அற்ற சாக்கிய போர் வீரன் ...
...அவன் போரில் மாண்டவர்கள் ...
...மனிதர்கள் யாருமில்லை ...
....மனித உருவில் உலவும் மனம் கொண்ட மிருகங்கள் ...
....
.....தமிழ் அங்குலிமாலாக்கள்...
..தலை குனியும் நாளை ... தம்ம பதம் சொல்லும் ...
.....அதில் சேரி தலைமுறை வெல்லும் ......
...வெறி இறந்து போய் ...முறை வளரும் ....
....
மதமும் சாதியும்
..மொழியும் ...இனமும் ...
..தம் வெறிக்கதவை மூடிக்கொள்ளும்
..தம்ம முறை.... இதயம் செல்லும் ...
..அதையே ......என் பறை பாடி சொல்லும் ...
வீரமணி
இணைபேராசிரியர்
டெல்லி
Saturday, January 1, 2011
....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....

....முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ....
வேட்டுவர் குலம் வாழும் விழல் நிறைந்த ஏரி வழி ...
..பாட்டியின் வீடு விட்டு ..பகல் பொழுதில் எனை தூக்கி
...செடி விளக்கி செந்நெல் புலம் பார்த்து ..
சேடை வாசம் மூக்கு தெளிக்க ...அள்ளி பருகிய ...தண்ணீர் ... அம்மா உனக்கு ...
அழுது அழுது என் கன்னத்தில் கருவெண் கோடு ...
...பொழுதுகள் புரியாது உன் தோல் மேல் தொங்கும் ..நான்கு கிலோ நான் ...
...முறம் வீசி புறம் போகும் பதடு ....உன் கண்ணில் பட்டுதெறிக்க...
....ஓ வென அழுத எனக்கு ஓமவாட்டர்...ஒருபுற முலைப்பால் கிட்டாமல் .....
உன் பாதம் மெதுவாய் ...நான் பாலைவனத்து ஒட்டகபயணிபோல்..
( பாளயத்தாளை ஒண்டி வாழ்ந்த பயணி )
...ஆடி ஆடி ...அயயஹோ உன் வலியறியாது..அம்மா ..
..நீயோ வழியறியாது ....சாராய குடிகாரன் வீடு நோக்கி .....
போய் பேசி வாழும் சாதி நிறைந்த நாட்டில் ...
...மெய் மறந்து வாழும் மெல்லிய புரட்சியா அம்மா ..நம் வாழ்க்கை ,,,,?
..பின் யார் அடித்தது உன்னை ...என் அண்ணா கயிறு வரை கண்ணீர் உருள ....?
....அப்பனா அல்ல அவன் பின் உள்ள சாதி 'வெப்பனா' (Weapon) ....
சர்கார் தந்த கைத்தறி புடவையோடு ...நம் பெண்டியரும் ...
....நாத்தாங்கால் வரை வாழும் வெள்ளை வேட்டியோடு நம் ..ஆண்மகரும் ...
..சமைந்த நொடிக்குள் சாதியில் வறுபடும் ..நம் பெதும்பையரும் ....
...சூத்து தெரிய சூதில்லாது அரைகால் சட்டையோடு நம் மழலையரும் ...
.............மாண்டுபோவமா அம்மா ....? ..
.மீட்டு வருவது யார் நம் சிந்திய வரலாற்றை ...?
...
..அன்று செஷங்கனுர் ரேஷன் கடைக்கு போக ....
..நீ அட்டை எடுக்க தேடினாய் ...சாமி அறையில் ..
.நானும் அட்டைபோல் ஒட்டிகொண்டேன் ..உன் முதுகில் ....
.....மணி பகல் ஒன்னுக்கு மேல் ....தார் சாலையில் உன் கால் உருகியது ....
...பூங்கானம் கௌண்டர் வாய்கால் நீரில் கால் பதித்து ...
..புழுதி வழி நீ போக ..அயயஹோ ...அனல் ...
.............நாபகம் இருக்கிறது ..உன் புடவையை தரையில் போட்டு ...
...................புழு போல் ஒரு அடி இரு அடி என புலம்பி நீ நகர்ந்த புதிய வரலாறு ...........
கார்காலம் பிறந்ததும் கரும்பு சுமக்கும் கூலி வேலை நீ போவாய் ..
...மார்கழி பூசணிக்காய் குழம்பு மரகதம் அக்காளுக்கு நீ கொடுப்பாய்...
...வெள்ளகுலம் மண்வாரி நட்டு வைத்த ஆலமரத்தில் ....
...சொல்லாமல் செத்த சேரி பெண்களின் ஆவிகளை குரி கேட்டு சொல் ...
....அவர்களின் குறி கடித்து குதறிய சாதி வெறி...நம் ஊரிலா உலாவருகிரதென ?
.....திசெம்பர் பூவும் ...பப்பாளியும்...தினம் தினம் கொடுத்தும்....
..பழைய சோத்தோடு காரக்குழம்பு தா என ..கௌண்டர் பெண்ணை அண்ணன் கேக்க ...
...........நாயே உனக்கு என்னதிமிர் என அண்ணனை அடித்தது யார் அம்மா ?
..பின் ரத்தம் கேட்டு ஆச்பிதிரியில் நடு ஆண்ட அழுதபோது ...
............நரசன் சித்தப்பா கொடுத்தது ...சாதியில்லா ...வெண் சீழா?
..அஞ்சாம் வாத்தியார் ...உக்கார உரலை துடைத்து தர ....
....யார் மா..இந்த பொடிப்பயல் என புவனகிரி தமிழில் அவர்கேட்க ...
...சார் ..சார்...என் பதினோராவது புள்ளை என ...வெள்ளக்காரன் மொழியில் நீ சார் சொல்ல ...
......பள்ளிகூடத்தில் அடுத்த வருஷம் அனுப்பு இவனை...
.............அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் அம்மாவின் முந்தானைக்குள்..அடைக்கலம் ..
..மாச பொறப்பு வருஷ பொறப்பு ஆனா போதும் ...
..இந்த சாராயம் குடிகாரன் ..எங்காவது போய் ...சம்பாதிச்சு குடிச்சிடுவான் ...
....ஆண்டில் எப்பாவது சுடும் இட்டிலி வடை அலுப்பில் ......அம்மா ..
....ரோடு போட வைத்த கருங்கல்லை துண்டில் சுருட்டி அடிக்க வரும் அப்பா ...
....ச்சே ..இது மனு உனக்கு சொன்ன பாடமா?
...ஆணாதிக்கத்தின் ...முதல் சூத்திரம் ..இந்துத்துவம் சொன்ன ...பெண்ணடிமை ....
............இது சேரியில் எப்படி தொத்திக்கொண்டது ....
....ஒ! சாராயம் ..சாதி பார்க்காமல் தரும் ..கிராமத்து பொதுஉடமை ஆணாதிக்கம் ...?
...........உடைந்து போனது ..இட்டிலி குண்டானும் ....வடை சட்டியும் ....
...மூட்டிய அடுப்பில் இருந்த மூணு செங்கல் ...
....எதிர் வீட்டில் எறிந்த சவுக்கை விறகில் ....சரணடைந்தது .....
......அம்மா என்னை மட்டும் தூக்கிகொண்டு..மாரியாத்தா கோயில் பக்கம் ஓட ...
...........அண்ணன்கள் சிதறி ஆலமரத்தின் ...வேர் பக்கம் ஒளிந்து கொள்ள ...
..............அப்பாவின் ...தாண்டவம் ...அடடா ...ஆணாதிக்கத்தின் ...ஒரு ..மாதிரி நடனம் .....
...........பாளையம் மட்டுமே அம்மாவுக்கு தெரிந்த ஆறுதல் மாநகரம் .....
........பத்து வயல் வேலி தாண்டி பத்திரமாய் எனை பிடித்து ...
...................ஏரிக்கரை மடுகில் எனை விட்டு ...த...எக்கா எக்கா ...என் ...
....நண்டு ஊமச்சி ...கெளுத்தி என் ...மகிழ்ச்சியில் பெரியம்மா .............
............என்னாடி..குடிகாரன் வேலைய கட்டிடானா வருசபொரப்பில்..............
............பனம்பழம் சுட்டு ...பல் முழுதும் நார் பிடிக்க ...கடித்து தின்னும் கருப்பு மேனிகள் ...
............எனக்கும் தர ....முதன் முதலாய்...நானும் பால் மறந்து தின்ன பனம்பழம் ....
......நண்டு குழம்பு ....ஊமச்சி அவியல் என் என அம்மா...எனக்கும் ஊட்ட ...
.....................அண்ணன்களை நினைத்து அவள் அழுததும் ...எனக்கு அன்றைய வலிகள்...
......அடுப்பில் கிடக்கும் அரை குறை மாவு ...
மல்லாகொட்டை சுடல் ...பனம்பழம் .....
............பைதன்காய்அவியல் ..பப்பாளி காய் ...
பழைய அரிசி ஊறல் ...பிணம் சக்கரை ...
பொரிக்கும் முன் உடைத்த அடை கோழி முட்டை ..
.பொசுக்கி தின்னும் ராமநத்தம் குருவி ...
.........கல்லால் அடித்த கல்லுகுருவி ....
சேரியில் யாரேனும் தந்த யாசக சோறு ....
.....ஓடும் ட்ரக்டரில் ஒடித்து தின்ன கரும்பு ....
முளியமரத்தில் ஒளிந்து சுடும் மரவள்ளி கிழங்கு ....
....அம்பது காசு ...ஒரு ருபாய் ...சேமிப்பில் வாங்கி...
பல் விலகாமல் தின்னும் ...சிகப்பு சேமியா ....
.....என அண்ணன்கள் இந்த காலத்தில் தின்னும் அவசர உணவுகள் ....
................அம்மாவின் கண்ணீற்கு அதுகூட ஒரு காரணமோ ..?
.....திரும்பி ...வீட்டிற்கு அவள் வரும்போது ....திரளாய் மடை உடைந்த கண்ணீர் ............
....ஏரி வழி எனை சுமந்து ......வீட்டை நினைத்து ..அவள் வாட .....
........அண்ணன்கள் ஓடி வர ...அம்மா அம்மா ..என் அழுது புலம்ப ......
..........பாசமென்றால் என்ன என் அந்த பறைச்சி காட்டினாள் அன்று ...
........ஐயோ நான் பெத்த பிள்ளைகளா....முனகல் சத்தமும் ...மூக்கு சிந்தி ...போட ...
....நல்ல தங்காள்............ ...கிணத்தில் போட்டதுபோல் இல்லாமல் ....
எங்களை ..பள்ளியில் போட்டாள்...
ஓல மட்டை ஒழுகும் ..எங்கள் வீட்டுக்கு ...அழைத்து வந்தாள்...எங்களை ....
.................நானும் அவசரத்தில் ..அவள் முலை பால் குடிக்க ......
...............அவளும் புன்னகையோடு ...பிள்ளைகள் பார்த்த ஆவலில் ...
,,,,,,,,,,,,என் கன்னம் ,கழுத்து ,முகம், நெற்றி ,மார்பு ..என்று ...பால் தெறிக்க ...
..................
....நான் பார்த்த ...புத்தாண்டு ...
.......முலைப்பால் தெறித்த முதல் ஆண்டு ..............................
இப்படிக்கு ...........
பாசக்காரன் வீரமணி ...
VEERAMANI .S
Asst. Professor/ Placement Co-ordinator(MIB),
Centre for Management Studies,
Jamia Millia Islamia( A central University),
New Delhi, India.
Subscribe to:
Comments (Atom)